Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM
கோவை தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளருக்கம்பாளையத்தில் 18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி, 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.90 ஆயிரம் சுழல்நிதியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார்.
தொடர்ந்து, ரூ.38.80 லட்சத்தில் பரமேஸ்வரன்பாளையம் முதல் குப்பேபாளையம் வரை சாலை மேம்பாட்டுப் பணி, ரூ.44 லட்சத்தில் சிறுவாணி சர்வீஸ் சாலை முதல் சின்னசாமி தோட்டம் வரை சாலை மேம்பாட்டுப் பணி, ரூ.44 லட்சத்தில் வலையன்குட்டை முதல் மாதேஸ்வரன் கோயில் வரை சாலை மேம்பாட்டுப் பணி என மொத்தம் ரூ.3.04 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராம.துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தமிழ்நாடு மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT