Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம்முதல் கடப்பாக்கம் வரையில் உள்ள கடலோர பகுதிகளின் மீனவ குப்பங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், உய்யாலிகுப்பம், கோவளம், ஆலிகுப்பம், கடலூர் பெரிய குப்பம், தேவனேரி உட்பட பல்வேறு மீனவ குப்பங்களில் கடல் அரிப்பு காரணமாக மீன் இறங்குதளம் மற்றும் குடிசைகள் சேதமடைந்து வருகின்றன. இதனால், தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என மீனவர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் பழனிசாமி புதுப்பட்டினம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, மீனவர்களை சந்தித்துபேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, தூண்டில் வளைவு கோரிக்கை தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்க உள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT