Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

மதுரை  மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மானச் செயற்பொறியாளர் ந

மதுரை

 மதுரை பெருநகர் வடக்கு மின் பகிர்மானச் செயற்பொறியாளர் ந.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பாலை துணை மின் நிலையத்தைச் சேர்ந்த நாராயணபுரம் பீடரில் மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இன்று (ஜன. 21) காலை 9 முதல் மாலை 5 மணி வரை எழில் நகர், நகர், திலக்நகர், அய்யர் பங்களா மெயின் ரோடு, கிருஷ்ணாநகர், அய்யப்பன் நகர், கோபாலபுரம், அய்யர்பங்களா-கண்ணணேந்தல் மெயின் ரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

நத்தம்

 நத்தம் அருகே வே.குரும்பபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, மணியக்காரன்பட்டி, கோணப்பட்டி, மருநூத்து, சில்வார்பட்டி, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுப்பட்டி, காவேரிசெட்டிபட்டி, ஆவிளிப்பட்டி, முளையூர், சின்னமுளையூர், ஒத்தக்கடை, எரமநாயக்கன்பட்டி, சக்கிலியன்கொடை, ராமராஜபுரம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் முத்துப்பாண்டி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x