Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கல்

தூத்துக்குடி: தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப்- 1 முத்துநகரை சேர்ந்த கருப்பசாமி மனைவி முத்துமாலை (27). இவர் கடந்த 15.01.2021 அன்று கனமழை காரணமாக மரம் முறிந்து மின்வயர் அறுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு மின் விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் வழங்க மின்துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துமாலையின் கணவர் கருப்பசாமியிடம் ரூ.5 லட்சத்தை, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x