Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் பெரும்பாலும் கலந்து கொள்ளாததால் மனு அளிக்க வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாவதாக கடந்த வாரம் ‘இந்து தமிழ்திசை நாளிதழில்’ படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் ஆட்சியர் சிவன் அருள், டிஆர்ஓ, ஆட்சியரின் நேர்முக உதவியாளர், ஆர்டிஓ, துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT