Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

பங்குச் சந்தையில்சென்செக்ஸ் 834 புள்ளி உயர்வு

பங்குச் சந்தையில் வாரத்தின் இரண்டாம் நாளான நேற்று மிகுந்த எழுச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் ரியல்எஸ்டேட், உலோக நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததில் குறியீட்டெண் 834 புள்ளிகள் உயர்ந்தது. இதனால் குறியீட்டெண் 49,398 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 240 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 14,521 புள்ளிகளானது.

மும்பை பங்குச் சந்தையில் பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய நிறுவனப் பங்குகள்6.77 சதவீதம் வரை உயர்ந்தன. அதேசமயம் டெக் மஹிந்திரா, ஐடிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் 0.30 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட், உலோக நிறுவனப் பங்குகள், பொதுத்துறை வங்கி பங்குகளின் விலைகள் உயர்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x