Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான 13 கடைகளை ஏலம் எடுத்தவர்கள், கடந்த ஓராண்டாக வாடகைத் தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். இதையடுத்து உதவி ஆணையர் செந்தில்அரசன் தலைமையிலான மேற்கு மண்டல அதிகாரிகள், 13 கடைகளுக்கும் நேற்று பூட்டு போட்டனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘24-வது வார்டில் 7 கடைகள், 22-வது வார்டில் 3 கடைகள், 23-வது வார்டு, 9-வது வார்டு, 17-வது வார்டில் தலா ஒரு கடைகள் என மொத்தம் 13 கடைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. அவர்கள் வாடகைத் தொகையை செலுத்திய பின்னர் தான் திறக்க முடியும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT