Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

ஆடு வியாபாரி கொலை: நண்பர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மேலவண்ணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி(40). ஆடு வியாபாரி. இவர், நேற்று முன்தினம் கீழப்பழுவூர் அருகே திருமழபாடி சாலையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார்.

தகவலறிந்த கீழப்பழுவூர் போலீஸார் அங்கு சென்று அவரை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், வழியிலேயே பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆடு வியாபாரத்தில் பணம் கொடுக்க வேண்டிய விவகாரத்தில் பழனிசாமியை, அவரது நண்பரான அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிவேலு(45) என்பவர் கழுத்தை அறுத்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x