Published : 20 Jan 2021 03:14 AM
Last Updated : 20 Jan 2021 03:14 AM

அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவிப்பு

நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜனவரி 10-ம் தேதி வரை ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

நிர்ணயித்த குறியீட்டை நிறைவு செய்யும் வகையில் உழைக்கும் பெண்களிடம் இருந்து போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை. எனவே, தகுதி வாய்ந்த பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பணிபுரியும் பெண்கள் பயன்பெறலாம் என, ஆட்சியர் மா. அரவிந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x