Published : 19 Jan 2021 06:49 AM
Last Updated : 19 Jan 2021 06:49 AM
`பொதிகை டிவியில் சம்ஸ்கிருதசெய்தி கேட்கப் பிடிக்காவிட்டால் வேறு சேனலை மாற்றிக்கொள்ளுங்கள்’ என, தடை கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இதுதொடர்பாக, மதுரைஅண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
15 நிமிட சம்ஸ்கிருத செய்திகள்
தமிழகத்தில் 803 பேர் மட்டுமேசம்ஸ்கிருதம் பேசும் நிலையில், பொதிகை டிவியில் 15 நிமிடசம்ஸ்கிருத செய்தி ஒளிபரப்பாகிறது. சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு மட்டும் ரூ.1,000 கோடிக்குமேல் நிதி ஒதுக்கிய மத்திய அரசு,மிகப்பழமையான தமிழ் மொழிக்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை.இந்த பாரபட்சத்துக்கு மத்தியில் பொதிகை டிவியில் சம்ஸ்கிருத செய்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. சம்ஸ்கிருத செய்திக்குத் தடை விதித்து அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கும் சமவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
அமர்வு விசாரணை
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘‘சம்ஸ்கிருத செய்தி தேவையில்லை எனில் மனுதாரர் டிவியை அணைத்துவிடலாம். அல்லது வேறு சேனலை மாற்றிக்கொள்ளலாம். மனுதாரர் தனதுகோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கலாம்’’ என்று கூறி மனுவை முடித்து உத்தர விட்டனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT