Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM

பொள்ளாச்சி அருகே குடோனில் பதுக்கிய 905 மானிய விலை உர மூட்டைகள் பறிமுதல்

விவசாயிகளுக்கு வேளாண் பணிக்காக மானிய விலையில் உரம் வழங்கப்பட்டுவருகிறது. இதை சிலர் வாங்கி பெயர் மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். கோமங்கலம் புதூரில் மானிய விலை உரத்தை பதுக்கி வைத்திருப்பதாக பொள்ளாச்சி சார் ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. வட்டாட்சியர் தணிகைவேல் தலைமையில் வருவாய்த் துறையினர் யுவபாரத்நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 905 மூட்டை மானிய விலை உரம் இருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், கோமங்கலம்புதூரை சேர்ந்த ராமசாமி என்பவரிடம், பொள்ளாச்சியை சேர்ந்த மும்மூர்த்தி என்பவர் குடோன் வாடகைக்கு எடுத்து மானிய விலை உரத்தை வாங்கி அதை பெயர் மாற்றி, வேறு மூட்டைகளில் அடைத்து கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து, உரம் மற்றும் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை வேளாண் துறையினரிடம் ஒப்படைத்தனர். குடோனுக்கு வருவாய்த் துறையினர் ‘சீல்’ வைத்தனர். ராமசாமி, மும்மூர்த்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வேளாண் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x