Published : 19 Jan 2021 06:51 AM
Last Updated : 19 Jan 2021 06:51 AM

அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

திருவாரூர்

10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று(ஜன.19) முதல் செயல்பட உள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்குட்பட்ட பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாரூர் ஆட்சியர் வே.சாந்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியது: 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவி களுக்கு நாளை(இன்று) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள் ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், மாணவ, மாணவிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர செய்தல், தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x