Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM
கோவையில் இரண்டாம் நாளில் 245 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
கோவையில் கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்றுமுன்தினம் தொடங்கியது. கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகள், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகார நிலையம் என 4 மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஒரு மையத்தில் தினமும் தலா 100 பேருக்கு தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் விவரங்களை பதிவு செய்யும் ‘Co-WIN’ செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் விருப்பமின்மை போன்ற காரணங்களால் முதல்நாளில் 72 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக 4 மையங்களில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, “இரண்டாவது நாளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 109 பேர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 30 பேர், பொள்ளாச்சியில் 80 பேர், நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் 26 பேர் என மொத்தம் 245 சுகாதாரப் பணியாளர்கள் 'கோவிஷீல்டு' தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். வரும் நாட்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறும்"என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT