Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM

தொடர் திருட்டுகளில் ஈடுபட்டவர் கைது

தலைமைச் செயலக குடியிருப்பு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை அயனாவரம், மேடவாக்கம் டேங்க் சாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, அவரிடம் 6 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது, பிடிபட்ட நபர் சென்னை, எம்.கே.பி.நகர், சாஸ்திரி நகர், முதல் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த கலைமணி (24) என்பது தெரியவந்தது.

அயனாவரம், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் திருடியதை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து கலைமணியை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள 14 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள், 1 சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x