Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக, வரும் 23-ம் தேதி கோவை வருகிறார்.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது: ராகுல் காந்தி வரும் 23-ம் தேதி பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில், குறு, சிறு தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார். அவர்களது கோரிக்கைகள், தேவைகள் குறித்து கேட்டறிகிறார். பின்னர், சிட்ரா சந்திப்பு அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், திருப்பூருக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT