Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனதுட்விட்டர் பதிவில் கூறியதாவது:
ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக் கொண்டு பதற்றத்தில் பிதற்றுவதற்கெல்லாம் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பலரும் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதால் எனது கருத்தைக் கூறுகிறேன்.
சோ தனது இறுதிமூச்சு வரைகடுமையான விமர்சனங்களைக்கூட நகைச்சுவை உணர்வோடும் நாகரிக எல்லையை தாண்டாமலும் செய்த பெருமைக்குரியவர்.
அவரை தனது ஆசானாக சொல்லிக் கொண்டு, துக்ளக் ஆசிரியராக இருக்கும் குருமூர்த்தி,கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்தும் வார்த்தைகள் அவரதுநிஜமான தரத்தைக் காட்டுவதாகவும், சோவின் பெயருக்கே களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.
கங்கை நீர் எது, சாக்கடை நீர் எது, மாஃபியா யார் என்பதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது தமிழக மக்கள்தானே தவிர, கங்கை புத்திரன் பீஷ்மராகவே தன்னை பாவித்துக் கொள்ளும் குருமூர்த்தி போன்ற மனநிலை கொண்டவர்கள் அல்ல. துக்ளக்விழாவில், அதன் ஆசிரியராக இருப்பவர் கையூட்டு பெற்றுக்கொண்டு பேசியதாக ஜெயக்குமார் போன்றவர்கள் எல்லாம் விமர்சிக்கும் அளவுக்கு குருமூர்த்தியின் தரம் தாழ்ந்து போனது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT