Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM
தமிழகத்தில் புதிதாக 621 பேருக்குகரோனா தொற்று உறுதியாகிஉள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 389, பெண்கள் 232 என மொத்தம் 621 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 29,573 ஆக அதி கரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 22,716 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,023 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 215 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 1,971 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6,299பேர் சிகிச்சையில் உள்ளனர்.
5 பேர் உயிரிழப்பு
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT