Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM

தமிழகத்தில் புதிதாக621 பேருக்கு கரோனா தொற்று

சென்னை

தமிழகத்தில் புதிதாக 621 பேருக்குகரோனா தொற்று உறுதியாகிஉள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 389, பெண்கள் 232 என மொத்தம் 621 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 180 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 29,573 ஆக அதி கரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 22,716 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 11,023 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 215 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 805 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 1,971 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 6,299பேர் சிகிச்சையில் உள்ளனர்.

5 பேர் உயிரிழப்பு

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் 2 பேர், தனியார்மருத்துவமனைகளில் 3 எனநேற்று 5 பேர் உயிரிழந்தனர்.இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,251 ஆகஉயர்ந்துள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x