Published : 16 Jan 2021 03:14 AM
Last Updated : 16 Jan 2021 03:14 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உதவியை மத்திய சுகாதாரத் துறை நாடியுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் சுகாதாரத் துறை, நிதி ஆயோக் அதிகாரிகள் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். அப்போது பூத் அளவில் கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதன்பின் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடந்த டிசம்பர் 31-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு கடிதம் அனுப்பினார். அதில், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை அடையாளம் காண வாக்காளர் பட்டியல் தகவல்களை தந்து உதவும்படி கோரப்பட்டது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர், இதர ஆணையர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு கடந்த 4-ம் தேதி மத்திய உள்துறை செயலாளருக்கு பதில் கடிதம் அனுப்பினார். அதில், "கரோனா தடுப்பூசி போடும் பணிக்கு தேர்தல் ஆணையம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். தேவையான தகவல்களை வழங்கும். எனினும் தடுப்பூசி திட்டப் பணிக்கு பிறகு வாக்காளர் விவரங்களை முழுமையாக அழித்துவிட வேண்டும். வேறு எந்த பணிக்கும் வாக்காளர் விவரங்களை பயன்படுத்த கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT