Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திராபுரம் அனுப்பல்லி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காளைகள் அணிவகுந்து வந்தன. மாடுகளின் கொம்புகளில் பரிசுப் பொருட்கள் கட்டப்பட்டிருந்தன. சீறி வந்த இந்த மாடுகளை இளைஞர்கள் பலர் அடக்கி, அதன் கொம்புகளில் உள்ள பரிசுகளை தட்டிச் சென்றனர்.
இதனிடையே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் போகிப் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருமலையில் ஏழுமலையான் கோயில் முன் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதேபோன்று, விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலிலும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஆந்திர முதல்வர் ஜெகன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மக்களுக்கு சங்கராந்தி (பொங்கல்) வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT