Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM

ஆந்திர மாநிலத்தில் தடையை மீறி நடந்தமஞ்சு விரட்டில் பங்கேற்ற இளைஞர்கள்

திருப்பதியை அடுத்துள்ள ராமச்சந்திராபுரம் அனுப்பல்லி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சி.

திருப்பதி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக் காலத்தில் சேவல் சண்டை மற்றும் மஞ்சு விரட்டு மிகவும் பிரபலம். சேவல் சண்டையில் கோடிக்கணக்கில் பணம் பந்தயம் கட்டப்படுவதால் அதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதுபோல் மஞ்சு விரட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி ஆந்திராவில் இரு பந்தயங்களும் நேற்று களை கட்டின.

சித்தூர் மாவட்டம், ராமச்சந்திராபுரம் அனுப்பல்லி கிராமத்தில் நேற்று நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காளைகள் அணிவகுந்து வந்தன. மாடுகளின் கொம்புகளில் பரிசுப் பொருட்கள் கட்டப்பட்டிருந்தன. சீறி வந்த இந்த மாடுகளை இளைஞர்கள் பலர் அடக்கி, அதன் கொம்புகளில் உள்ள பரிசுகளை தட்டிச் சென்றனர்.

இதனிடையே ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் போகிப் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருமலையில் ஏழுமலையான் கோயில் முன் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதேபோன்று, விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலிலும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஆந்திர முதல்வர் ஜெகன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மக்களுக்கு சங்கராந்தி (பொங்கல்) வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x