Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM
எம்ஜிஆரின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜன.17 முதல் 19-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிப்புக்கிணங்க, கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, ஜன.17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடக்க உள்ளன. கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டங்கள் நடக்க உள்ளன.
மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தை எம்ஜிஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்புகொண்டு பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்தி அதன் விவரங்களை தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் அனைவரும் தங்களது மாவட்டங்களில் நடக்கவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுசிறப்புரையாற்றுவர். பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும்கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் மாவட்டத்தில் 19-ம் தேதி நடக்கும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும். 17-ம் தேதி தென்சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டத்தில் நடக்கும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமியும் பங்கேற்கின்றனர்.
தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும்கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT