Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM
பெண் உட்பட 2 பேர் மீது குண்டர் சட்டம்
திருப்பூர்: திருப்பூரில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விக்கரமங்கலம் வடக்குபட்டியை சேர்ந்த எஸ்.செல்வம் (45), திருப்பூர் கே.வி.ஆர். நகர் ஓடக்கரை ஜீவா நகரை சேர்ந்த எஸ்.செல்வி (40) ஆகியோர் மத்திய காவல் நிலைய போலீஸாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்ட செல்வம் மீது கஞ்சா விற்பனை தொடர்பாக மத்திய காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், தெற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் உள்ளன. செல்வி மீது மத்திய காவல் நிலையத்தில் 4, தெற்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளது. இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். சிறையில் உள்ள இருவரிடமும், அதற்கான நகலை போலீஸார் வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT