Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

வேளாண் விற்பனைக் குழு தலைவர் நியமனம்உதகை நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது

வேளாண் விற்பனைக் குழு தலைவர் நியமனம்

உதகை

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், குழுத்தலைவர் பதவிக்குமாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், நீலகிரி மாவட்டஅதிமுக முன்னாள் செயலருமான கே.ஆர்.அர்ஜுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோல, துணைத் தலைவராக முருகன், இயக்குநர்களாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், வேளாண் விற்பனைக் குழுச் செயலர் சரஸ்வதி உட்பட 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x