Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM

வேளாண் விற்பனைக் குழு தலைவர் நியமனம்

நீலகிரி மாவட்ட வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியிடம் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், அப்பதவிக்கு மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள்செயலாளருமான கே.ஆர்.அர்ஜுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல, துணைத் தலைவராக முருகன், இயக்குநர்களாக நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், வேளாண் விற்பனைக் குழுச்செயலர் சரஸ்வதி உட்பட 12பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதிதாக பொறுப்பேற்றவர் களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x