Published : 14 Jan 2021 03:20 AM
Last Updated : 14 Jan 2021 03:20 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல் துறை சார்பில் குமரன் சாலை நீதிமன்ற வீதியை ஒட்டியுள்ள காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநகர காவல் ஆணையர் ஜி.கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினர். துணைக் காவல் ஆணையர்கள் கே.சுரேஷ்குமார், பி.சுந்தரவடிவேல், உதவி காவல் ஆணையர் வெற்றிவேந்தன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT