Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

திருவள்ளூரில் வரும் 16-ம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள திருவள்ளூர் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்திலும், ஊத்துக்கோட்டை வட்டம், கச்சூர் சேமிப்புக் கிடங்கிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மருந்துகளை நேற்று திருவள்ளூர்ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் பொன்னையா தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருத்தணி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகள், மீஞ்சூர், வெள்ளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் முதல் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் 19,600 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x