Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
புதுச்சேரி சுகாதாரத்துறை வெளி யிட்டுள்ள தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 3,002 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 29 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதும் இல்லை.இதுவரையில் இறப்பு எண் ணிக்கை 639 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.66 சதவீதமாக உள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக் கப்பட் டோரின் எண் ணிக்கை 38 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவ மனைகளில் 115 பேரும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டோர் 163 பேரும் என 278 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று 44 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT