Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

கடலூரில் சமத்துவ பொங்கல் விழா

கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் எம்.கே.ஜே நகர், பொன் ஜோதி நகர், வி.எஸ்.எல் நகர் நலச் சங்கத்தினர் இணைந்து வெளிச்செம்மண்டலத்தில் சமத்துவ பொங்கல் நேற்று கொண்டாடப்பட்டது.

கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன், தேவநாதன், சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். சமத்துவ பொங்கல் விழாவை கடலூர் ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மருதவாணன், மாவட்ட கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், ஆதிநாராயணன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் விழா கொண்டாடினர். எம்.கே.ஜே நகர் துணைத் தலைவர் பழனி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x