Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

பாலமேடு அருகிலுள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

மதுரை

பாலமேடு அருகேயுள்ள சாத்தியார் அணையிலிருந்து பாசனத் துக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

அலங்காநல்லூரை அடுத்து பாலமேடு அருகேயுள்ளது சாத்தி யார் அணை. 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையிலும் தண்ணீர் வரத்து இல்லை. இதையடுத்து பல்வேறு கிராம விவசாயிகளும் இணைந்து நீர் வழித்தடத்தை சரிசெய்து அணைக்கு தண்ணீர் வந்து சேர ஏற்பாடு செய்தனர். இதையடுத்து கடந்த வாரம் அணை முழுக் கொள்ளளவை எட்டி யது. இந்நிலையில் நேற்று அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தண்ணீரைத் திறந்துவிட்டார். மாணிக்கம் எம்எல்ஏ., மதுரை ஆட்சியர் த.அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

வினாடிக்கு 25 கன அடி வீதம் 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீரால் கீழச்சின்னம்பட்டி பெரியகண்மாய், எர்ரம்பட்டி சந்தைகுளம், சுக்காம்பட்டி, கோவில்பட்டி, அழகாபுரி, அய்யூர், குறவன்குளம், முடுவார்பட்டி, ஆதனூர் ஆகிய பகுதி கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்படும். இந்தக் கண்மாய்கள் மூலம் 1,499 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x