Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு கரோனா பரவலைத் தடுக்க காவல்துறை ஏற்பாடு

மதுரை

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மதுரை பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்களை பொது மக்கள் வீட்டில் இருந்தே பார்க்க வசதியாக சமூக வலைத் தளங்களில் நேரடி ஒளிபரப்பு மாவட்டக் காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நாளையும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாளும் நடக்கிறது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்களை வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், மதுரை மாவட்டக் காவல்துறை சார்பில், Madurai District Police- Facebook, Twitter மற்றும் YouTube ஆகிய சமூக வலைத்தளங்களில் ஜல்லிக்கட்டை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இருக்கும் இடத்திலேயே ஜல்லிக்கட்டை பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x