Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

122 அடியை கடந்தது நீர்மட்டம் முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 122 அடியை கடந்துள்ள நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு துணை கண்காணிப்புக் குழுவினர் பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.

பெரியாறு அணையை கண் காணித்துப் பராமரிக்க உச்ச நீதி மன்றம் நியமித்த மூவர் குழுவுக்கு உதவியாக துணை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணையச் செயற் பொறியாளர் சரவணக்குமார் உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி அணையின் நீர்மட்டம் 136.75 அடியாக இருந்தபோது துணைக் குழுவினர் அணையில் ஆய்வு செய்தனர். நேற்று அணை நீர்மட்டம் 122.30 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 2,315 கனஅடியாகவும், வெளியேற்றம் 700 கன அடியாகவும் இருந்தது.

இந்நிலையில் ஐந்து மாதங் களுக்குப் பிறகு இக்குழுவினர் நேற்று ஆய்வுக்காக வந்தனர். பின்னர் மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் அணை நீர்வரத்து, நீர் வெளியேற்றம், கசிவுநீர் குறித்து குழுவினர் ஆய்வு செய்தனர். பொதுவாக ஆய்வுக்குப் பிறகு குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று பலத்த மழை காரணமாக கூட்டம் நடைபெறவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x