Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

அதிமுக மகளிரணியினர் பழநியில் ஆர்ப்பாட்டம்

பழநி

திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதியைக் கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் பழநியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பழநி பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட மகளிரணிச் செயலாளர் வளர்மதி தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் பாரீஸ்ராஜா பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழி மற்றும் மகளிர் அணி மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது மழை பெய்ததால் பெண்கள் குடைபிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x