Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

தேனி என்.எஸ். கல்லூரியில்

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் டி.ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய உடை அணிந்து மாணவிகள் பொங்கல் வைத்தனர். கல்லூரிச் செயலாளர் சி.காளிராஜ், இணைச் செயலாளர்கள் கே.சுப்புராஜ், கே.வன்னியராஜன் ஆகியோர் பொங்கல் பண்டிகையின் சிறப்புகள், இவ்விழா கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினர். கல்லூரி முதல்வர் எஸ்.சித்ரா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x