Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

மதுரையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பொங்கல் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு, மதுரை நகர வீதிகளில் அடைமழையையும் பொருட்படுத் தாமல் புத்தாடைகள் எடுக்கவும், பொங்கல் பொருட்கள் வாங்கவும் மக்கள் திரளாகக் குவிந்தனர்.

பொங்கல் என்றாலே குழந்தைகள் முதல் பெரியோர் வரை தித்திக்கும் கரும்பு, சர்க்கரைப் பொங்கல்தான் நினைவுக்கு வரும். அதனால், மதுரை நகரில் புத்தாடை எடுக்கவும், கரும்பு, மஞ்சள் கொத்து, பொங்கலிடுவதற்கான புதுப்பானை, பச்சரிசி, வெல்லம் வாங்க வீதிகளில் மக்கள் குவிந்தனர்.

மாட்டுப்பொங்கல் கொண்டாட் டத்துக்காக மாடுகளுக்கான கழுத்து மணி, வண்ண வண்ணக் கயிறுகள் அதிகளவு விற்பனைக்குக் குவித்து வைக்கப்பட்டுள்ளன. மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட், பூ மார்க்கெட் மட்டுமின்றி அனைத்து சிறிய சந்தைகள், நடைபாதைக் கடைகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை கொட்டும் மழையிலும் நேற்று களைகட்டியது. மக்கள் கூட்டம், கூட்டமாக குடைகளைப் பிடித்துக்கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்.

அலங்காநல்லூர், பாலமேடு, சோழவந்தான், வாடிப்பட்டி, திருமங்கலம் போன்ற கிராமங்களில் பொங்கல் பண்டிகையை விவசாயிகள், காளை வளர்ப்போர் உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். அதனால், கிராமப் புறச்சந்தைகளிலும், கடைகளிலும் வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது.

பண்டிகை நாளில் வீட்டுவாசலை அலங்கரிக்கும் வண்ணக் கோலப் பொடிகளையும் பெண்கள் ஆர் வத்துடன் வாங்கியதைப் பார்க்க முடிந்தது. மேலும், பொங்கல் பண்டிகைக்காக வீட்டின் முன் பகுதியில் வைக்கப்படும் கூரைப் பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதனால், நகரில் வழக் கத்தை விட மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொங்கல் கொண் டாட்டத்துக்காக காய்கறிகள், கரும்பு, பூக்கள், வாழைத் தார்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பொருட்களையும் மக்கள் ஆர்வத் துடன் வாங்கிச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x