Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

வேளாண் சட்ட நகல்களை எரித்து போராட்டம்

ஈரோடு: கோபியில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, சட்ட நகல்களை எரித்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருக்கிணைப்புக்குழுவின் செயற்குழு உறுப்பினர் முனுசாமி தலைமையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது வேளாண் சட்ட நகல்களை எரித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். ஈரோடு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சட்டநகல் எரிப்பு போராடம் நடந்ததாக, அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x