Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

பணி நிரந்தரம் செய்ய தூய்மைப் பணியாளர் கோரிக்கை

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் செல்லகுட்டப்பட்டியை சேர்ந்த பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிகமாக 71 பேர் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம். இதனால் எங்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை.குறைந்த ஊதியத்தால் நாங்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். பணி நிரந்தம் செய்யக்கோரி பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x