Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் தற்காலிக பணி வாய்ப்பு

தருமபுரி

தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உள்ள தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் பணியிடத்துக்கு ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி யாளர் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியில் சேருவோருக்கு மாதம் தோறும் தொகுப்பூதியமாக ரூ.9000 வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணிணி கல்வியில் பட்டயப்பயிற்சி(டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) மற்றும் ஆங்கிலம்/தமிழ் முதுநிலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பங்களை, www.dharmapuri.nic.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புகைப்படம் ஒட்டப்பட்டு, நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 30-ம் தேதி மாலை 5.45 மணிக்குள், ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி’ என்ற முகவரியில் சேர்க்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x