Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானிய விலையில் மாடித்தோட்ட காய்கறி விதை தொகுப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானிய விலையில் மாடித்தோட்ட காய்கறி விதை தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தோட்டக் கலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மாடித்தோட்டம் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு தொகுப்பாக தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்து வருகிறது.

இதை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வீட்டுக்குத் தேவையான காய்கறி, பழ வகைகளை விளைவித்து பயன்பெறலாம்.

ஒரு தொகுப்பின் விலை ரூ. 850 ஆகும். அரசு மானியம் ரூ. 340 போக மீதம் ரூ. 510 செலுத்தினால் போதுமானது.

இதில் 2 கிலோ எடையுள்ள தென்னை நார் கழிவு உரம் ஆறு எண்கள், ஆறு பாலித்தீன் பைகள், முருங்கை, புஷ் பீன்ஸ், வெண்டை, அவரை, கத்திரி மற்றும் சுரைக்காய் ஆகிய ஆறு விதை பாக்கெட்டுகள், உயிர் உரமான அசோஸ்பைரில்லாம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா 200 கிராம், உயிரியல் பூச்சிக் கொல்லியான அசாடிரக்டின் 100 மில்லி லிட்டர், பூஞ்சாணக் கொல்லியான டிரைக்கோடெர்மா 200 கிராம் மற்றும் செயல் விளக்க நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

இவற்றை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் பெறலாம். மாடித்தோட்ட தொகுப்பு தேவைப்படுவோர் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x