Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

விவசாயி வீட்டில் 15 பவுன் நகை ரூ.1.75 லட்சம் ரொக்கம், கார் திருட்டு

நாமக்கல்: விவசாயி வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1.75 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த காரையும் திருடியவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நாமக்கல் அருகே வள்ளிபுரத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னுவேல் (60). கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றார். வீட்டில் இருந்த மற்ற நபர்களும் வெளியே சென்றிருந்தனர். இந்நிலையில் பொன்னுவேல் வீடு திரும்பியபோது வீட்டின் முன்புறம் நிறுத்தியிருந்த கார் மாயமாகியிருந்தது.

மேலும், வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளிருந்த 15 பவுன் நகை, ரூ. 1.75 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் பொன்னுவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

வீட்டினுள் நகை, பணத்தை திருடிய நபர்கள் அங்கிருந்த கார் சாவியையும் எடுத்துக் கொண்டு காரில் தப்பியது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x