Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு தொடக்கம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2021-ம் ஆண்டுகான திட்ட நிரல்படி வரும் 2021 மே மாதம் குரூப்-2 , குரூப்-2ஏ தேர்வுகளுக்கு அறிவிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் இத்தேர்வுகளுக்கு தற்போது இணைய வழியில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தினமும், காலை 10.30 மணி முதல் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் இலவச பாடக் குறிப்புகள் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும். பயிற்சியில் சேர்ந்து பயனடைய விரும்புவோர் https://bit.ly/2XkY5KJ என்ற இணைய முகவரியில் தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரம் அறிய விரும்பினால், 04342-296188 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, ஆர்வமுள்ள மாணவ, மாணவியர் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x