Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

தா.பழூர் சிவாலயத்தில் நால்வர் வழிபாடு

மார்கழி மாத நிறைவு நாளை யொட்டி, அரியலூர் மாவட்டம் தா.பழூர் சிவாலயத்தில் நால்வர் வழிபாடு நேற்று நடை பெற்றது.

தா.பழூர் விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாத சுவாமி கோயிலில் மார்கழி மாதம் 30 நாட்களும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில், மார்கழி மாத நிறைவுநாளையொட்டி, நாயன்மார்களை சிறப்பிக்கும் விதமாக திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், சுவாமி வீதிஉலா நடைபெற்றது. முன்னதாக, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x