Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM
காரைக்கால்: காரை சிறகுகள் இயக்கத்தின் நிறுவனரும், பொதுச் செயலாளருமான வெங்கடேஷ் அனந்தகிருஷ்ணன், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:
புதுச்சேரியில் முதல்வர், துணை நிலை ஆளுநர் இடையே நிலவும் அரசியல் ரீதியான முரண்பாடுகளால், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அரசின் அனைத்துத் துறைகளின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை. எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநரை மாற்றம் செய்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT