Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

நெல்லையில் குடிநீர் விநியோகம் ரத்து (மழை செய்திக்கு அருகில் வைக்கலாம்)

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் தலைமை நீரேற்று நிலையங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மின் மோட்டாரை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளுக்கும் இன்று 14.01.2021 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய இயலாது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x