Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

கும்பகோணம் அருகே ஒரே கிராமத்தில் 25 பேருக்கு கரோனா தொற்று

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வந்த நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை ஊராட்சி கொட்டியப்படுகை கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 வயதுடைய ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மேலும் சிலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அந்த கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் வரை 90 பேருக்கு பரிசோதனை செய்ததில், 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர்கள் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அங்கு நேற்று நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 125 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, கொட்டியப்படுகை கிராம எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தி, வெளிநபர்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x