Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

யானைகள் நடமாட்டமுள்ள பகுதியில் வாழை வளர்க்க வனத் துறை தடை

பொள்ளாச்சி

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு தேயிலை எஸ்டேட்களில், தற்போது யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டில் யானைகள் முகாமிடுவதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்புகளில் புகுந்து வீடுகளை இடித்தும், ரேஷன் கடைகளை உடைத்தும் பொருட்களை சேதப்படுத்துகின்றன. யானை தாக்குவதால் தொழிலாளர்கள் உயிரிழப்பு அடிக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வனத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, “யானைகள் நடமாட்டம் காணப்படும் தேயிலைத் தோட்டப்பகுதியில், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுக்க செல்லக்கூடாது. யானைகளை துன்புறுத்தும் வகையில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக்கூடாது.யானைகள் முகாமிட்டுள்ள பகுதியில், எஸ்டேட் நிர்வாகம் தேயிலை பறிக்கும் பணிக்கு தொழிலாளர்களை அனுப்பக்கூடாது.

தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் யானைக்கு பிடித்தமான வாழை, கொய்யா, பலா போன்றவற்றை பயிரிடக்கூடாது. இது குறித்து அனைத்து எஸ்டேட் நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x