Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பொங்கலை முன்னிட்டு சேலம், திருச்சிக்கு கொடிசியாவில் இருந்து பேருந்துகள் இயக்கம்

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தருமபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளுக்கும், சிங்காநல்லூர் பேருந்து நிலையத் திலிருந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேசுவரம், திருச் செந்தூர், திருநெல்வேலி, ராஜ பாளையம், குமுளி, தேனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படு கின்றன.

இதனால் மாநகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பொங்கலை முன்னிட்டு தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும் அரசு போக்குவரத்துக் கழக கோவை கோட்டத்தின் சார்பில், கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, "வரும் 14-ம் தேதி வரை சேலத்தைக் கடந்து செல்லும் பேருந்துகள், திருச்சியைக் கடந்து செல்லும் பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x