Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் பெண்ணின் தந்தையை கொன்று இளைஞர் தற்கொலை முயற்சி

கோவை

கோவை சுல்தான்பேட்டை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜான் ஏன்ஜலிஸ்(62). அங்குள்ள தென்னை நார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி செலின்ரோசி(53). அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்குச் சென்ற சார்லஸ் ஜான் ஏன்ஜலிஸ், மீண்டும் வேலைக்குத் திரும்பவில்லை. ஊழியர்கள் அவரைத் தேடிச் சென்றபோது, வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சுல்தான்பேட்டை போலீஸார் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "சார்லஸ் ஜான் ஏன்ஜலிஸின் இளைய மகளை, குமாரபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக்(25) ஒருதலைபட்சமாக காதலித்துள்ளார். அவரை திருமணம் செய்துவைக்கும்படி கார்த்திக் கேட்டதற்கு சார்லஸ் ஜான் ஏன்ஜலிஸ் மறுப்பு தெரிவித்து, வேறு இடத்தில் மகளுக்கு திருமணம் நிச்சயித்துள்ளார். இதையறிந்த கார்த்திக் சார்லஸ் ஜான் ஏன்ஜலிஸை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். மேலும், அங்கிருந்து தப்பிச் சென்ற கார்த்திக், போலீஸ் விசாரணைக்குப் பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது நண்பர்கள் கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x