Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

ஸ்டீல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

தொடர்ந்து உயரும் ஸ்டீல் விலையை குறைக்க வலியுறுத்தி அரசு ஒப்பந்ததாரர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், உக்கடம் மேம்பாலம், குளங்கள் சீரமைப்பு, பாதாள சாக்கடை திட்டம், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தினர் கூறும்போது, "வெளிநாடுகளுக்கு ஸ்டீல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக் கூடாது. விலை உயர்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் மேம்பாலம், தரைப்பாலம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் கட்டுமானம், சீரமைப்பு பணிகள் தொடர்பான டெண்டரில் பங்கேற்க ஒப்பந்த நிறுவனங்கள் தயக்கம் காட்டுகின்றன. எனவே, ஸ்டீல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x