Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
கோவை: கோவையில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்காக, கோவை-நாகர்கோவில் அதிவிரைவு ரயிலில் ராஜாமணி (72) என்பவர் முன்பதிவு செய்திருந்தார். இதையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ராஜாமணி, முதலாவது நடைமேடைக்கு செல்வதற்காக அங்குள்ள எஸ்கலேட்டரில் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். அப்போது, எஸ்கலேட்டர் படிகட்டில் அவரது இடது கால் சிக்கிக்கொண்டதால், காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் ரேகா, என்.வி.பிஜு ஆகியோர் ராஜாமணியை மீட்டு, எஸ்கலேட்டரை நிறுத்தினர். பின்னர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT