Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பெண்களை இழிவுபடுத்துவதாக கூறிஆவடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

ஆவடி: கோவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் பங்கேற்ற மக்கள் சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை, இழிவாக பேசி அவரை திமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

அதே போல், திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், சமீபத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முதல்வர் குறித்தும் பெண்கள் குறித்தும் தரம் தாழ்ந்து விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுகவினர் பெண்களை இழிவுபடுத்துவதாகக் கூறி நேற்று ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அம்பத்தூர் எம்எல்ஏவுமான அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நூர்ஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை விமர்சித்து, கண்டன உரையாற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x