Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

மாமல்லபுரத்தில் ஜன.15-ல் பொங்கல் விழா

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் சுற்றுலாத் துறை சார்பில், மாமல்லபுரம் அருகில் உள்ள ஏதேனும் ஒரு கிராமப் பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கரோனா அச்சத்தால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில்லை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், சுற்றுலாத் துறைசார்பில் பொங்கல் விழா கொண்டாட்டங்கள் தமிழ்நாடு சொகுசு விடுதியில் எளியமுறையில் உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன் நடைபெற உள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், உறியடித்தல், இசை நாற்காலி, பல்லாங்குழி உள்ளிட்ட பல்வேறு தமிழர் மரபு சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இதில், ஆட்சியர், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதால், உள்ளூர் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மாமல்லபுரம் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x